ரம்ஜான் சிந்தனைகள் -5: இறை நினைவு வேண்டும்
ADDED :2090 days ago
இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன் என இறைவன் சொல்வதாக நாயகம் சொல்கிறார். அவனுடன் இருக்கிறேன் என்பதற்கு அந்த அடியானைத் தன் பாதுகாப்பில் இறைவன் வைக்கிறான் என்று பொருள். இறைநினைவுடன் இருப்பவனே உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாவான். அவனை மறந்தவன், பிணத்திற்கு ஒப்பாவான் என்கிறார் நாயகம். இறை நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. அது குறித்து அலட்சியமாய் இருப்பது ஒருவனது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். இந்த மனித உடலின் வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் உடல் அழியும். அது போல இறைச்சிந்தனை என்னும் உணவு கிடைக்காமல் போனால் உள்ளத்திற்கு மரணம் ஏற்பட்டு விடும். எனவே எப்போதும் இறை நினைவுடன் வாழுங்கள்.