உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் அருள்பெற பாடுங்க!

முருகனின் அருள்பெற பாடுங்க!

திருமுருகனின் அருள்பெற திருமுருகாற்றுப்படை வெண்பா பாடுங்கள்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!    
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்    
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,  
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக்   
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்!  

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி    
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்  
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;  
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே!

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில் அஞ்சல் என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்    
முருகா! என்று ஓதுவார் முன்.

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்    
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்  
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்    
நம்பியே கைதொழுவேன் நான்.

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,    
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்   
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல  
இடம்காண்; இரங்காய் இனி!

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்  
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு - சுருங்காமல்,   
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்   
பூசையாக் கொண்டே புகல்.

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,    
தான் நினைத்த எல்லாம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !