உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி  மாத தேய்பிறை  பிரதோஷ பூஜை நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று,  ஆனி மாத தேய்பிறை  பிரதோஷ பூஜை நடந்தது.

இதை முன்னிட்டு, கோவில் கொடி மரத்தின் அருகில் உள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், கொரோனா எதிரொலியால் கோவில் மூடப்பட்டதால், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பிரதோஷ பூஜை செய்தனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக, பிரதோஷ பூஜை ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !