நெகமம் நித்தீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்
ADDED :2027 days ago
பொள்ளாச்சி: நெகமம் வாரச்சந்தை அருகே, 700 ஆண்டுகள் பழமையான நித்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஊர் பெரியவர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் ஒருங்கிணைந்து, கோவில் திருப்பணிகள் மேள்கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து, கோவில் திருப்பணி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்ததோடு, திருப்பணிக்கான தொகையை ஒதுக்கீடு செய்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை, பாலாலயம் நடந்தது. சுவாமி சிலைகள் வெளியே எடுக்கப்பட்டு, அருகில் அமைக்கப்பட்ட தனி அறையில் ஆகம விதிப்படி வைத்து, பூஜை நடந்தது.நிகழ்ச்சியில், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், கோவில் செயல் அலுவலர் வனிதா, நெகமம் பேரூராட்சியின் முக்கிய பிரமுகர்கள், கோவில் திருப்பணி நன்கொடையாளர்கள், சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.