புத்தேரி பெருமாள் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரிேஷத்திரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம்; காலை 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜையின்போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.