உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு

திருவதிகை கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவத்தை  முன்னிட்டு உற்சவர் பெருமாள் தாயாருடன் சேவையில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில், ஊரடங்கை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பக்தர்கள் இன்றி பவித்ரோற்சவம் துவங்கியது. காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை , ஹோம பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தில் பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் காலை 108 கலச திருமஞ்சனம், பரிவார மூர்த்திகளுக்கு, பவித்ரம் சாற்றுதல், மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று பவித்ரோற்சவம் நிறைவையொட்டி, காலை 9:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !