தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி
ADDED :2138 days ago
கொரோனா பரவலால், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் அனைத்து வழிபாட்டு தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, அனைத்து வழிபாட்டு தலங்களையும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, கோயில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.