சதுரகிரியில் இன்று முதல் அனுமதி
ADDED :1805 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர். அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாளிலிருந்து 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவது வழக்கம். நவ.14ல் வரும் அமாவாசையை முன்னிட்டு இன்று காலை 7:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். முதியவர்கள், குழந்தைகள், நோய்பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும், பக்தர்கள் முகக்கவசமணிந்து வரவேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்திஉள்ளது.