கல்பட்டு விஸ்வரூப சனீஸ்வரர்
ADDED :1868 days ago
விழுப்புரம் அருகிலுள்ள கல்பட்டு கிராமத்தில், 21 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரர், இடது காலை தரையில் வைத்து, பிரமாண்டமான காகத்தின் மீது வலது காலை ஊன்றிய நிலையில் இருக்கிறார். இவரை சனிக்கிழமையில் வழிபட்டால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமத்துச்சனி தோஷம் நீங்கும்.
எப்படி செல்வது:
விழுப்புரம் – திருக்கோவிலுார் சாலையில் 15 கி.மீ., துாரத்தில் மாம்பழபட்டு கிராமம். இங்கிருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ.,
தொடர்புக்கு: 97868 65634, 04146 – 264 366