ஆலங்குப்பம் கோவிலில் மிளகாய் பொடி அபிேஷகம்
ADDED :1963 days ago
வானுார்; ஆலங்குப்பம் அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு நேற்று பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது.உழவர்கரை நகராட்சி ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா கடந்த 8ம் தேதி கொடி கட்டுதலுடன் துவங்கியது. 9ம் தேதி அம்மனுக்கு சாகை வார்க்கப்பட்டது. நேற்று மதியம் பக்தர்கள் அரியபுத்திரி, பாண்டியன், அய்யப்பன், பிரபாகரன் ஆகியோருக்கு, பால் மற்றும் மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.இன்று 11ம் தேதி அங்காளம்மன் மின் அலங்காரத்துடன் வீதியுலாவும், நாளை 12ம் தேதி மயானக்கொள்ளை நடக்கிறது.