ஆறுமுக சுவாமி கோவிலில் சூர்ய பூஜை
ADDED :1688 days ago
திருத்தணி : கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், நேற்று நடந்த, முதல் நாள் சூர்ய பூஜையில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், நேற்று முதல் நாள், சூர்ய பூஜை நடந்தது.இதையொட்டி, காலை, 6:05 மணிக்கு, சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவர் முருகப்பெருமானின் திருப்பாதம் மீது விழுந்தது. அப்போது, மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இன்று காலை, சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், நாளை, மூலவரின் தலை மீதும் சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.