உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் இன்று முதல் தங்கரதம் புறப்பாடு

பழநி முருகன் கோயிலில் இன்று முதல் தங்கரதம் புறப்பாடு

பழநி : பழநி முருகன் கோயிலில் இன்று (மார்ச் 31) முதல் தங்கரதம் புறப்பாடு துவங்குகிறது.

பழநி முருகன் மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ. 2 ஆயிரம் பணம் செலுத்தி மூன்று பக்தர்கள் தங்கரதம் இழுக்கலாம். பத்து நிலைகளில் தங்கரதப்புறப்பாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 26 முதல் நேற்று வரை தங்கரதப் புறப்பாடு நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று (மார்ச் 31) மலைக்கோயிலில் இரவு 7:00 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !