பாலமேடு பத்திரகாளியம்மன் கோயில் விழா
ADDED :1657 days ago
பாலமேடு : பாலமேட்டில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நான்கு நாட்கள் நடந்தது. காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள்நேர்த்திக்கடனாக அக்னி சட்டி, பால்குடம், மாவிளக்குஎடுத்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை சக்தி கரகம் ஜோடித்து முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக சென்று நீரில் கரைத்து மஞ்சள் நீராடினர். ஏற்பாடுகளை நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.