பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1652 days ago
புதுச்சேரி - பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் 49வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த 18ம் தேதி ஊரணி பொங்கலுடன் துவங்கியது. சுவாமிக்கு தினமும் அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வருகின்றது. முக்கிய விழாவான செடல்உற்சவம் கடந்த 28ம் தேதி நடந்தது.தொடர்ந்து 29 ம்தேதி தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பாலமுருகர், விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.