உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்ஸவம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்ஸவம்

 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்ஸவம் நேற்று நடந்தது.

கோயிலில் மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனித் திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை உற்ஸவர் சன்னதியில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். மார்ச் 18 முதல் தினம் இருவேளை நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, புனிதநீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.உச்சிகால பூஜைக்கு பின்பு, மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை சரவணப்பொய்கையில் எழுந்தருளினர்.

ஆறுமுக சுவாமி முன்பு பூஜைகள் முடிந்து சிவாச்சாரியார்களால் சரவணப் பொய்கை தண்ணீருக்குள் அஸ்தர தேவர் கொண்டுசெல்லப்பட்டு, அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !