ராமநவமியன்று பாட வேண்டிய பாடல்!
ராமநவமியன்று காலையில் பாட வேண்டிய பாடல் இது.நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும்தூயகற் கடகமும் எழுந்து துள்ளவேசித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்துஅருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.மாலையில் பாடவேண்டியதுராமநவமியன்று மாலையில் ராமனின் பட்டாபிஷேகப் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.மங்கள கீதம் பாடமறையொலி முழங்க வல்வாய்ச்சங்கினம் குமுறப் பாண்டில்தண்ணுமை யொப்பத் தாவில்பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்பூமழை பொழிய விண்ணோர்எங்கள் நாயகனை வெவ்வேறுஎதிர் அபிடேகஞ் செய்தார்மாதவர் மறைவ வாளர்மந்திரக் கிழவர் முற்றுமூதறி வாளர் உள்ளஞ்சான்றவர் முதனீ ராட்டச்சோதியான மகனு மற்றைத்துணைவரும் அனுமன் தானும்தீதிலா இலங்கை வேந்தும்- பின்அபிடேகஞ் செய்தார்.சித்தமொத் தனன்என் றோதுந்திருநகர்ச் செல்வ மென்னஉத்தமத் தொருவன் சென்னிவிளங்கிய உயர்பொன் மௌலிஒத்துமெய்க் குவமை கூரஓங்குமூ வுலகத் தோர்க்குந்தத்தம் உச்சியின்மேல் வைத்ததுஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து. மக்களிடையே தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று ராமநவமியன்றும், மறுநாள் புனர்பூஜையிலும் ராமபிரானிடம் பிரார்த்திக்க வேண்டும்.