கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED :1608 days ago
விருதுநகர்: கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி விருதுநகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூளிபட்டி தவசிலிங்கம் சுவாமி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை.