சிறிய கோயில்களின் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்
ADDED :1879 days ago
திருநகர்: திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் பகுதிகளிலுள்ள சிறிய கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் அப்பகுதிகளிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் வழங்கினார் அவரது ஏற்பாட்டில் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் முன்பு தினம் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது மக்கள் நீதி மையம் இளைஞரணி சார்பில் 500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி அரிசியை நிர்வாகிகள் அழகர், பரணி ராஜன் வழங்கினார்.