தவறை தட்டி கேட்போம்
ADDED :1629 days ago
நம் கண் முன்னால் எத்தனையோ தவறுகள் நடக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவது நம் கடமை. தவறு செய்வோரைத் திருத்தும்போது, அவர்களால் நமக்கு ஆபத்தும் வரலாம் இல்லையா.... எனவே சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து, தவறை தட்டிக் கேட்போம்.
‘‘உங்களில் யாராவது ஒருவர், ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் வெறுத்து விலகி விடட்டும்’’ என்கிறார் நாயகம்.
தவறு செய்வதை நம் கரத்தால் தடுத்து நிறுத்தும்போது எதிராளி சண்டை போடலாம். அப்படி முடியாத பட்சத்தில், அவரைக் கண்டித்தோ, இனிய வார்த்தைகள் மூலம் புத்திமதி சொல்லியோ திருத்த முயற்சிக்கலாம். அது முடியாவிட்டால் அந்த நபருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று விலகிவிடலாம்.