உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூர்,  திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெர்மானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை, பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி தீபாரதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !