ஆனி திருமஞ்சனம்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1647 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று (15ம்தேதி) ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது. ஆனி திருமஞ்சன முன்னிட்டு கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு, அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.