அலங்காநல்லூரில் அம்மனுக்கு வளைகாப்பு விழா
ADDED :1584 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லூர் கேட்டுகடையில் வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, தீபாராதனையை தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்கள், வளையல்கள் அணிவிக்கப்பட்டு வளைகாப்பு விழா நடந்தது. அர்ச்சகர் வாசுதேவன் சிறப்பு பூஜைகள் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாகி தனம் அம்மாள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.