பழநியில் பக்தர்கள் இன்றி ஆடிப்பூரம்
ADDED :1629 days ago
பழநி: பழநியில் இந்தாண்டு ஆடிப்பூரம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பழநி மலைக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் ஆடிப்பூரம் நாளான இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர், வெளி மாவட்ட பக்தர்கள் வருகை இல்லை. உள்ளூர் பக்தர்களும் கோயில் தரிசனத்திற்காக வருகை புரியவில்லை சிலர் மட்டும் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்தனர். இதனால் இந்த ஆண்டு ஆடிப்பூரம் பழநியில் பக்தர்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது.