திருவாடனை மாரியம்மன் திருவிழா: பூ தட்டு ஊர்வலம்
ADDED :1527 days ago
திருவாடானை : திருவாடானை தெற்குரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பூ தட்டு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். மாரியம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் முன்பு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.