உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர நாராயணர் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி சிறப்பு வழிபாடு

சங்கர நாராயணர் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி சிறப்பு வழிபாடு

மதுரை : மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில், சங்கர நாராயணருக்கு இன்று  02.10.2021, புரட்டாசி மாதம் 16-ம் நாள், மூன்றாம் சனிக்கிழமை, சிறப்பு  அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கர நாராயணர் சுவாமிக்கு,  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.  இன்றைய பூஜை இறைப் பணியில் மணப்பட்டியை சேர்ந்த ஜி.எம்.டி. கேட்டரிங் முத்துப்பாண்டி - திவ்யபாரதி குடும்பத்தினர். பக்தர்களுக்கு  புளியோதரை, உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர  நாராயணர் கல்வி  அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், பூசாரி செல்வம், ஆகியோர் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !