பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
ADDED :1483 days ago
கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா முதல் நாளில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.