உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்கனி திருவிழா துவக்கம்: மாப்பிள்ளை அழைப்பு நடந்தது!

மாங்கனி திருவிழா துவக்கம்: மாப்பிள்ளை அழைப்பு நடந்தது!

காரைக்கால்:காரைக்கால் அம்மையார்கோவில் மாங்கனி திருவிழாவின் முதல் நாளான நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின்  வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.பரமதத்தர் செட்டியார் பட்டுவேட்டி, முத்துமாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக் கப்பட்டு, ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டார்.

மாப்பிள்ளை அழைப்பு: முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாராதனை முடிந்து, மாப்பிள்ளை பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தர் செட்டியார் அலங்கரித்த வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது.

திருக்கல்யாணம்: இன்று காலை (2ம் தேதி) புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 10.30 மணிக்கு காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடக்கிறது.மாலையில் பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமணம் முடிந்து காரைக்கால் அம்மையார் - பரமதத்தர்  முத்து பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

மாங்கனி வீசும் நிகழ்ச்சி: நாளை(3ம் தேதி) அதிகாலை பிக்ஷõடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 8 மணிக்கு சிவபெருமான் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா நடக்கும். அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைதம்பி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !