உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணபதி பாளையம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கணபதி பாளையம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கருமத்தம்பட்டி: கணபதி பாளையம் சித்தி விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த எம். கணபதி பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. விநாயகருக்கு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் பணியும், சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணிகளும் நடந்தன. கடந்த, 13 ம்தேதி காலை, 4:30 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை முதல் கால ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம், மூன்றாம் கால ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிவுற்று, பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 7:00 மணிக்கு, விமானங்கள் மற்றும் சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !