ஐயப்பன் அவதரித்தது ஏன்?
                              ADDED :1445 days ago 
                            
                          
                           
ஹரியாகிய மகாவிஷ்ணுவுக்கும் ஹரனாகிய சிவபெருமானுக்கும் மகனாக ‘ஹரிஹர புத்திரன்’ அவதரித்தார். மனித வடிவில் பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டனாக வளர்ந்தார். புலிப்பாலுக்காக காட்டுக்கு சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின் சபரிமலையில் கோயில் கொண்டார். இதுவே ஐயப்பன் வரலாறு. ஆனால் பூதநாதோபாக்கியானம்  என்னும் நுாலில் சற்று மாறுதலான கதை கூறப்படுகிறது. பந்தள மன்னருக்குப் பதிலாக பாண்டிய மன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரை புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.