நன்மை தருவார் கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா
ADDED :1376 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா ஆறாம் நாளில் (13ம் தேதி) சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 1431 பசலி மாசி திருவிழா ஆறாம் நாளான நேற்று (13ம் தேதி) இரவு ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து, கோயிலில் சைவசமய வரலாற்று கழுவேற்ற லீலை நடைபெற்று உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இறைவன் இறைவியை தரிசனம் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.