அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி பௌர்ணமி சிறப்பு வழிபாடு
ADDED :1367 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று இரவு சதுர்த்தி திதியில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பெருமானுக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.