உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா 22ம் தேதி துவக்கம்

கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா 22ம் தேதி துவக்கம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா அடுத்த மாசம் மார்ச் 22 ஆம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, 22 ந் தேதி செவ்வாய்கிழமை சகுனம் கேட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அடுத்த மாதம் மார்ச் 11 ந் தேதி வெள்ளிக்கிழமை தேர் முகூர்த்தம், ஆயக்காமல் நடல், 16 ந் தேதி புதன்கிழமை இரவு கிராமசாந்தி, கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வசந்தம் பொங்கல் வைத்தல், 21 ந் தேதி திங்கட்கிழமை காலை 11 : 00 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல், நிகழ்ச்சி நடக்கிறது. 22 ந் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு அம்மன் திருத்தேரில் வீதி உலா வருதல், 26 ந் தேதி மகா சரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பெரிய மருது பாண்டியன், செயல் அலுவலர் சந்திரமோகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !