உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

வடமதுரை மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் இன்றிரவு நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

கடந்த மார்ச் 5ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 13ல் அம்மன் சாட்டுதல் நடந்தது. மார்ச் 15 முதல் நேற்றிரவு வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்றிரவு 11:00 மணியளவில் நூறுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும், மார்ச் 22ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. தக்கார் சுகன்யா மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !