அருணாசலபுரம் கோயிலில் கொடை விழா
ADDED :5072 days ago
சேர்ந்தமரம்: அருணாசலபுரம் சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நடந்தது. அருணாசலபுரம் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நடந்தது. நிகழ்ச்சியில் தீர்த்தம் அழைத்தல், வில்லிசை, நையாண்டி மேளம், சாமபூஜை, பொங்கலிட்டு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.