உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோவிலில் விழா துவக்கம்: கம்பம் நடப்பட்டது

மகா சக்தி மாரியம்மன் கோவிலில் விழா துவக்கம்: கம்பம் நடப்பட்டது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், விழா துவங்கியது.

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 12ம் ஆண்டு விழா கடந்த, 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. நாளை, மாலை,6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. 24ல் வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை குழுவினரின், வள்ளிகும்மி கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 26ல் அம்மன் அழைப்பும், 27ம் தேதி காலை சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. மாலையில் மாவிளக்கு எடுத்தலும், 28ம் தேதி மஞ்சள் நீராடும், 29ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பிரதீப்ராஜ், செயலாளர்கள் ரவிக்குமார், முத்துராஜ் பொருளாளர் கிருஷ்ணசாமி கமிட்டி உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !