சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர வேண்டும் என்பது ஏன்?
ADDED :5068 days ago
நாம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கிறோம். திரும்பி வரும் போது ஆலயத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு வருகிறோம். ஏன்? சிவாலயங்களில் மட்டுமே அவ்வாறு அமர்ந்து விட்டுவர வேண்டும் என்ற காரணம் தெரியுமா. நம்மைப் பின்தொடர்ந்து சிவனுடைய பூதகணங்கள் நம் வீட்டிற்கு வந்து விடக்கூடாது. மேலும் சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதனால் சிவன் கோயில் தூசு கூட நம்மேல் ஒட்டக் கூடாது என்பதும் ஒரு கருத்து. அதுபோல் விஷ்ணு கோயிலில்களில் தரிசனம் செய்த பிறகு அமர்ந்து விட்டு வரக் கூடாது. ஏனென்றால் அப்போது தான் லட்சுமி நம்முடன் வீட்டிற்கு வருவாள். அதிர்ஷ்டம் பொங்கும் என்பது ஒரு கருத்து.