உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரைவில் லட்சியத்தை அடையப்போகிறாய்

விரைவில் லட்சியத்தை அடையப்போகிறாய்

ஊக்கப்படுத்துகிறார் பாரதியார்* லட்சியத்தை குறித்து ஆழமாக சிந்திக்கிறாயா.. விரைவில் அதை அடையப்போகிறாய் என்று பொருள்.  * அறிவுக் கடலாக கடவுள் உள்ளார். அதில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம்.   * உண்மையான பக்தி இருந்தால் நீ கேட்பதை கடவுள் கொடுப்பார். * தினமும் தியானம் செய். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். * உயிர் இரக்கமே தர்மங்களில் மேலானது.   * உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.* அன்பு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.   * மலர்ந்த முகமும் இனிய சொல்லும் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி. * மனதில் பயம் இருக்கும் வரை நீ அறிவாளியாக முடியாது.  * குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து விளையாட்டையும் கற்றுக்கொடு.    * ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள். அது சிறந்த தானம். * உன்னை திருத்திக் கொள்ள முடியவில்லை என்றால் பிறரை திருத்தும் அதிகாரத்தை இழந்து விடுகிறாய்.         * தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.* வீடு, நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம்.  * இன்று புதிதாய் பிறந்தோம் என எண்ணினால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.* அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !