பணச்சுமையும்.. மனச்சுமையும்!
ADDED :1254 days ago
உலகில் பிறந்த அனைவருக்கும் பணத்தின் மீது பேராசை இருக்கிறது. பணம் வைத்திருந்தால் எதையும் வாங்கலாம் என்பதே இதற்கு காரணம். இது உண்மைதானே. பணம் வைத்திருப்பவர்களின் பேச்சுத்தானே சபையேறுகிறது என்று பலரும் நினைக்கலாம்.
எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஒருவருக்கு பணம் சேர சேர மனதில் குரூர சிந்தனை உண்டாகிறது. இது யாருக்கும் தெரிவதில்லை. இதற்காக எல்லோரும் இப்படித்தான் என்றுகூற முடியாது. அதில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் பணச்சுமை அதிகமானால் மனச்சுமை அதிகமாகும்.