உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; மே 27 முதல் 5 நாட்கள் அனுமதி

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; மே 27 முதல் 5 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு மே 27 முதல் 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிரதோஷம் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது வைகாசி அமாவாசையை முன்னிட்டு மே 27 முதல் 31ம் தேதி முடிய 5 நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !