உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுகையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

புதுகையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதியில் கமலாயி அம்மன் கோவிலில், சமணர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதை, முருகன் என, உள்ளுர் மக்கள் வழிப்பட்டு வந்தனர்.

புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு குழுவினர் பாண்டியன், இந்திரஜித் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதில், இது சமணர் சிற்பம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, அக்னி ஆற்றின் கரையில் பல இடங்களில் சமணர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுள் 20 செ.மீ., உயரம், 12 செ.மீ., அகலத்தில் நின்ற நிலையில் இருக்கும் சிற்பம் இது தான். இரு புறம் இரண்டு குத்து விளக்குகளும், சாமரமும், தலைக்கு மேல் முக்குடையுடனும் நிர்வாண கோலத்தில் இந்த சிற்பம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், அக்னி ஆற்றங்கரையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், எண்ணெய்ப்பிசுக்குடன் இருந்ததை துாய்மை செய்தும் சமணச் சிற்பம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !