திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம்
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு தெப்போற்சவம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது. தினம் விநாயகர், சுப்ரமணியர், அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் நடந்தது. பிரமோற்சவ விழாவில் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுரத்தில் தங்கரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 5 தேர்திருவிழா மற்றும் சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நேற்று இரவு வானவேடிக்கையுடன் தெப்போற்சவம் சிறப்பாக நடந்தது. இன்று செண்பகத்தியாகராஜ சுவாமி இடையனுக்கு காட்சிக் கொடுக்க எழுந்தருளல் மற்றும் விசாக தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.