உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா தொடக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா தொடக்கம்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அம்மன் சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க நேற்று காலை, கடக லக்னத்தில் ஆடிப்பூர கொடியேற்ற விழா நடந்தது.  இதையொட்டி விநாயகர் மற்றும் உற்சவர் பராசக்தி அம்மன் கொடிமரம் முன் எழுந்தருளினர். இனி தினமும் காலை, மாலை  பராசக்தி அம்மன், மாடவீதி உலா வரும். நிறைவு நாளான ஆக.,1ம் தேதி மாலை கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரையில், வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு, வளைகாப்பு உற்சவம் நடக்கும். தொடர்ந்து அம்மன் வீதி உலா, இரவு, 10:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன் தீ மிதி விழா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !