பழநியில் பக்தர்கள் கூட்டம்
ADDED :1168 days ago
பழநி: பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் மலைக் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர்.
பழநியில் விடுமுறை நாளை, நேற்று முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வருகை புரிந்தனர். பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. மலைக்கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. ரோப் சேவை இல்லாததாலும், மூன்றாவது வின்ச் செயல்படாதாலும், வின்ச் வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து மலைக்குச் சென்றனர். சில மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அடிவாரம் முக்கிய வீதிகளில் வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.