இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி
ADDED :1168 days ago
சென்னை: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வரும் 18ம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை, மேற்கு மாம்பலத்தில் எழுந்தருளியுள்ள காசி விசாலாட்சி அம்மன் உடனாகிய காசி விஸ்வநாதர் கோயில், கோதண்டராமர் கோயில், சங்கரமடம் கோசாலையில் உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது. கோயிலில் பன்னிருதிருமுறை பாராயாணம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு:
எஸ். கணேசன் 9840 123 866
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்