திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் நிறைவு
ADDED :1124 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் நிறைவடைந்தது. இக்கோயிலில் ஆக.21 ல் ஞாயிறு உத்ஸவம் துவங்கியது. ஆவணி ஞாயிறு நாட்களில் மகாலெட்சுமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவணி கடைசி ஞாயிறான நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு .அருள்பாலித்தார். பின்னர் நடந்த தீபராதனையை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து இரவு மணிக்கு மகாலெட்சுமி தாயார் சன்னதியில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.