உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி பவுர்ணமி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

புரட்டாசி பவுர்ணமி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல, உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, சிவபெருமானாக வழிபடும் மலையை, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று வழிபட்டு செல்கின்றனர். இதில் நாளை, 9ல் அதிகாலை, 4:09 மணி முதல், 10ல் அதிகாலை, 3:11 மணி வரை புரட்டாசி மாத பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !