உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் வாங்கும் நிகழ்ச்சி: நாளை சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் வாங்கும் நிகழ்ச்சி: நாளை சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி 5ம்நாள் திருவிழாவை முன்னிட்டு கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6:30முதல் 7:30 மணிக்குள் நடக்கிறது.கோயிலில் நாளை (அக். 30) சூரசம்ஹார லீலை நடக்கிறது. அதற்காக இன்று மாலை வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை முன்னிட்டு சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், பவளக் கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜை முடிந்து திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்படும். அம்பாள் கரத்தில் இருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்படும். தீபாராதனைகள் முடிந்து பூ சப்பரத்தில் சுவாமி திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் சென்று அருள்பாளிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !