கந்த சஷ்டி திருவிழா : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1076 days ago
போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி ஐந்தாம் நாள் விழா கோயில் தக்கார் ராமதிலகம் தலைமையில் நடந்தது. முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்தகுருக்கள் செய்திருந்தார். பக்தர்கள் பல்வகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, சமேத முருகன் சுவாமியின் தரிசனம் பெற்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.