இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1059 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை சோமவாரம் பிரதோஷத்தை முன்னிட்டு காலை சிறப்பு ஹோமம் மாலை நந்தியம்பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி1008 சங்காபிஷேகம் அலங்காரம் ஆராதனை தீபாராதனை நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறைவலம் வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷம் பூஜை நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.