கார்த்திகை அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்
ADDED :1042 days ago
ராமேஸ்வரம்: கார்த்திகை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.கார்த்திகை அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதனை தொடர்ந்து கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.